ADDED : அக் 14, 2025 12:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:அமராவதிபாளையத்தில் திங்கள்தோறும் கால்நடைச்சந்தை நடக்கிறது.
தீபாவளியையொட்டி, நேற்று மாடு, எருமை, காளை, கன்றுகுட்டி வரத்து அதிகமாக இருந்தது.
கடந்த வாரம், 703 கால்நடைகள் வந்தன; நேற்று, 879 கால்நடைகள் வந்தன. கன்றுகுட்டி, 2,500 - 3,500 ரூபாய்; பசு மாடு, 29 ஆயிரம் - 32 ஆயிரம் ரூபாய்; எருமை, 30 ஆயிரம் - 33 ஆயிரம்; காளை மாடு, 25 ஆயிரம் - 29 ஆயிரம் ரூபாய் என விற்கப் பட்டது.
மாடுகள், 3,000 ரூபாய்; எருமை, 2,000 ரூபாய் வரை விலை உயர்ந்தது; கன்றுக்குட்டி விலையில் மாற்றமில்லை. கரூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் இருந்து, கேரளாவில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர்.
மாடுகள் வர்த்தகம், 1.35 கோடி ரூபாய்க்கு நடந்ததாக சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.