sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மகளிர் குழுக்களுக்கு ரூ.1995 கோடி கடனுதவி

/

மகளிர் குழுக்களுக்கு ரூ.1995 கோடி கடனுதவி

மகளிர் குழுக்களுக்கு ரூ.1995 கோடி கடனுதவி

மகளிர் குழுக்களுக்கு ரூ.1995 கோடி கடனுதவி


ADDED : அக் 10, 2025 10:17 PM

Google News

ADDED : அக் 10, 2025 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

''2025 - -26ம் நிதியாண்டில் தற்போது வரை, 2,549 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 1955.19 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது'' என கலெக்டர் கூறினார்.

தனிநபர் வருமானம் பெருக்கும் நோக்கத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு தொழில் முனைவு நிதிகள் வழங்கப்படுகின்றன. அதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்ட தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வாயிலாக, மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து, அடிப்படை பயிற்சிகள் வழங்கி, சுழல்நிதி மற்றும் கடன் இணைப்பு வழங்கி, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இப்பணிகள் அனைத்தும், 265 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களால் செயல்படுத்தப்படுகின்றன.

மகளிர் திட்டங்களின் கீழ், ஆடு வளர்ப்பு, கறவை மாடு மற்றும் கோழி வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மேற்கொள்ள கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.

பல்லடம் ஒன்றியம், பருவாய், மல்லேகவுண்டம்பாளையம், இச்சிப்பட்டி, திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சிப் பகுதிகளில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாயிலாக அமைக்கப்பட்டுள்ள உணவுப் பொருள் பதப்படுத்தும் உற்பத்தி, விசைத்தறி சிறு தொழில் தொகுப்பு உற்பத்தி, கைத்தறி சிறுதொழில் தொகுப்பு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் குறித்து கலெக்டர் மனிஷ் நாரணவரே ஆய்வு மேற்கொண்டார்.

2025--26ம் ஆண்டில் தற்போது வரை, 2,549 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 1955.19 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் கூறினார்.

மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி, உதவி திட்ட அலுவலர்கள் சம்பத்குமார், ஜோசப், சம்பத்குமார், பல்லடம் பி.டி.ஓ., கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us