/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளிகள் பராமரிப்பு ரூ.2 கோடி ஒதுக்கீடு
/
அரசு பள்ளிகள் பராமரிப்பு ரூ.2 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜூலை 17, 2025 10:50 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 1,323 அரசு பள்ளிகளின், நடப்பு கல்வியாண்டு பராமரிப்பு செலவினங்களுக்கு, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடப்பு கல்வியாண்டு துவங்கிய நிலையில், பள்ளிகளுக்கு பராமரிப்பு, பள்ளிகளுக்கான பொருட்களை வாங்குவதற்கு நிதி ஒதுக்க தலைமையாசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குனரகம் வாயிலாக, மாநிலம் முழுதும், 37 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு, 97 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; இதில், திருப்பூர் மாவட்டத்துக்கு, 1,323 அரசு பள்ளிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், குறைந்த பட்சம், 10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இந்த தொகையை முன்னுரிமை அடிப்படையில் செலவு செய்ய வேண்டும். கை கழுவும் வசதி, பாதுகாப்பான குடிநீர் உறுதி செய்ய வேண்டும்.
மழைகாலம் துவங்க உள்ளதால் துாய்மை பணி, கட்டடப் பராமரிப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும். வழிகாட்டுதல்களை பின்பற்றி பள்ளிக்கு உரிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே தொகை செலவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.