/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீவீரராகவர் கோவிலில் ரூ.6.77 லட்சம் காணிக்கை
/
ஸ்ரீவீரராகவர் கோவிலில் ரூ.6.77 லட்சம் காணிக்கை
UPDATED : டிச 28, 2024 07:38 AM
ADDED : டிச 27, 2024 11:53 PM

திருப்பூர், ; திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் உண்டியலில், 6.77 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டன. செயல் அலுவலர் வனராஜா மற்றும் கோவில் அலுவலர்கள், அறங்காவலர்கள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. தன்னார்வ பக்தர்கள் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில், ஆறு லட்சத்து, 77 ஆயிரத்து, 468 ரூபாய் காணிக்கையை பக்தர்கள் செலுத்தி இருந்தனர். அதுதவிர, தங்கம், 18.4 கிராமும், வெள்ளி, 94 கிராம் அளவுக்கு உண்டியலில் இருந்தது. சிலர், கேரள லாட்டரி சீட்டுகளையும் உண்டியலில் செலுத்தியிருந்தனர். விஷ்ணுவின் திருநாமம் எழுதிய தாள்களும் இருந்தன.
திருப்பூர், டிச. 28-
திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் உண்டியலில், 6.77 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டன. செயல் அலுவலர் வனராஜா மற்றும் கோவில் அலுவலர்கள், அறங்காவலர்கள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. தன்னார்வ பக்தர்கள் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில், ஆறு லட்சத்து, 77 ஆயிரத்து, 468 ரூபாய் காணிக்கையை பக்தர்கள் செலுத்தி இருந்தனர். அதுதவிர, தங்கம், 18.4 கிராமும், வெள்ளி, 94 கிராம் அளவுக்கு உண்டியலில் இருந்தது. சிலர், கேரள லாட்டரி சீட்டுகளையும் உண்டியலில் செலுத்தியிருந்தனர். விஷ்ணுவின் திருநாமம் எழுதிய தாள்களும் இருந்தன.
---
திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் உண்டியல் நேற்று திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன.
பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியிருந்த கேரள லாட்டரி சீட்டுகள்.