sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பொங்கலுக்கு சிறப்பு ரயில் விடுங்க! பயணியர் கோரிக்கை 

/

 பொங்கலுக்கு சிறப்பு ரயில் விடுங்க! பயணியர் கோரிக்கை 

 பொங்கலுக்கு சிறப்பு ரயில் விடுங்க! பயணியர் கோரிக்கை 

 பொங்கலுக்கு சிறப்பு ரயில் விடுங்க! பயணியர் கோரிக்கை 


ADDED : டிச 20, 2025 08:58 AM

Google News

ADDED : டிச 20, 2025 08:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்துக்காக, உடுமலை வழியாக, பயணியர் ரயில்களை கூடுதலாக இயக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் - கோவை அகல ரயில்பாதை பணிகள் நிறைவு பெற்று, கடந்த 2015, ல், இருந்து ரயில்போக்குவரத்து உள்ளது. இவ்வழித்தடத்தில், படிப்படியாக ரயில்சேவை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

பயணியர் கூறியதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி, முன்பு, பாலக்காடு - திண்டுக்கல் வழித்தடத்தில், சிறப்பு ரயில் இயக்கப்பட்டு, அதிக வரவேற்பு கிடைத்தது. நடப்பாண்டும், இத்தகைய ரயிலை இயக்க வேண்டும்.

பொங்கலை தொடர்ந்து வரும், தைப்பூசம், பொள்ளாச்சி, உடுமலை பகுதியில், சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி, பழநிக்கு பாதயாத்திரையாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். இவ்வாறு, செல்பவர்கள், சொந்த ஊருக்கு பஸ்களில் திரும்புகின்றனர். அப்போது, உடுமலை, பொள் ளாச்சி மற்றும் கேரளா பாலக்காடு உட்பட பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் போதிய பஸ் வசதி இல்லாமல், பாதிக்கப்படுகின்றனர். சிறப்பு பஸ்கள், மடத்துக்குளம், உடுமலை, கோமங்கலம் போன்ற ஸ்டாப்களில் நிற்பதில்லை.

தைப்பூசத்துக்காக கோவை - பழநி - திருச்செந்துார் சிறப்பு ரயில் இயக்கினால், பயனுள்ளதாக இருக்கும். மதுரை கோட்ட நிர்வாகிகள் இது குறித்து முன்னதாகவே ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us