/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று 9வது கட்டமாக சம்பள உயர்வு பேச்சு
/
இன்று 9வது கட்டமாக சம்பள உயர்வு பேச்சு
ADDED : மார் 17, 2026 05:56 AM
திருப்பூர்-: பின்னலாடை தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சு வார்த்தை மீண்டும் இன்று மாலை நடக்க உள்ளது.
திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்கள் சம்பள உயர்வு ஒப்பந்தம் தொடர்பான எட்டாவது கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் நடந்த கூட்டத்திற்கு தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். உற்பத்தியாளர்கள் சங்க கூட்டு குழு மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு நிர்வாகிகள் பங்கேற்று விரிவாக பேசினர். ஏறத்தாழ சம்பள உயர்வு பேச்சு வார்த்தை சுமூகமாக முடிய உள்ள நிலையில், பேச்சுவார்த்தை மீண்டும் இன்று நடைபெற உள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இரு தரப்பினரும் ஆலோசித்து, விரைவில் சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உருவாகி உள்ளதாக தொழில் துறையினர் கூறுகின்றனர்.

