sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 திறனாய்வு தேர்வுக்கு மாதிரி தேர்வு; அரசு பள்ளிகளில் பயிற்சி தீவிரம்

/

 திறனாய்வு தேர்வுக்கு மாதிரி தேர்வு; அரசு பள்ளிகளில் பயிற்சி தீவிரம்

 திறனாய்வு தேர்வுக்கு மாதிரி தேர்வு; அரசு பள்ளிகளில் பயிற்சி தீவிரம்

 திறனாய்வு தேர்வுக்கு மாதிரி தேர்வு; அரசு பள்ளிகளில் பயிற்சி தீவிரம்


ADDED : நவ 15, 2024 09:40 PM

Google News

ADDED : நவ 15, 2024 09:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில், தேசிய வருவாய் வழி தேர்வுக்கான மாதிரி 'ஆன்லைன்' தேர்வுகள் நடந்தன.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வு கல்வியாண்டு தோறும் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு அவர்களின் மேல்நிலைப்படிப்பு முடியும் வரை, மாதந்தோறும் உதவித்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இத்தேர்வில், அதிகமான மாணவர்களை வெற்றி பெற செய்வதற்கும், மாணவர்களின் திறன்களை வளர்க்கும் வகையிலும், தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் பள்ளிகளில் நடத்துவதற்கு பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.

இதன் அடிப்படையில், பள்ளிகளில் ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உணவு இடைவேளை நேரத்தில் 'ஆன்லைன்' வாயிலாக இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்பு கல்வியாண்டு தோறும் நடத்தப்படுகிறது.

நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வு பிப்., மாதம் நடக்கிறது. இத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில், உடுமலை சுற்றுப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில், 'ஆன்லைன்' பயிற்சி வகுப்புகள் தற்போது நடக்கிறது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் 'ஆன்லைன்' வாயிலாக மாணவர்களுக்கு அந்தந்த பாடங்களுக்கு ஏற்ப பயிற்சி அளிக்கின்றனர். தற்போது, பள்ளிகளில் திறனாய்வு தேர்வுக்கான முதற்கட்ட மாதிரி 'ஆன்லைன்' தேர்வு நடந்தது. அடுத்தகட்டமாக மாணவர்களுக்கான மாதிரி எழுத்து தேர்வுகளும் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us