sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'சாண்டல் ட்ரீ ரெசிடென்ஸி' புதிய மனைப்பிரிவு துவக்கம்

/

'சாண்டல் ட்ரீ ரெசிடென்ஸி' புதிய மனைப்பிரிவு துவக்கம்

'சாண்டல் ட்ரீ ரெசிடென்ஸி' புதிய மனைப்பிரிவு துவக்கம்

'சாண்டல் ட்ரீ ரெசிடென்ஸி' புதிய மனைப்பிரிவு துவக்கம்


ADDED : ஜூன் 15, 2025 04:06 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 04:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், டி.டி.பி., மில் ரோட்டில், 'சாண்டல் ட்ரீ ரெசிடென்ஸி' என்ற புதிய மனைப்பிரிவு துவக்க விழா நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற கே.ஆர்.சி., ஹவுசிங் நிறுவனத்தின் புதிய லே அவுட், 'சாண்டல் ட்ரீ பிரைவேட் ரெசிடென்ஸி', திருப்பூர், அவிநாசி ரோடு, டி.டி.பி., மில் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 25 சென்ட் முதல் மனைகள் அமைந்துள்ளன. புதிய லே அவுட் திறப்பு விழா நடைபெற்றது.

ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல் துவக்கி வைத்தார். மணி அப்பேரல்ஸ் சேர்மன் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் முதல் விற்பனையைத் துவக்கி வைத்தனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், சக்தி சினிமாஸ் சுப்ரமணியம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

துவக்க விழா அன்றே அனைத்து மனைகளும் விற்பனையாகின. பிளாட் உரிமையாளர் சங்க தலைவராக, குமரன் மருத்துவமனை தலைவர் செந்தில்குமரன் தேர்வு செய்யப்பட்டார்.

கே.ஆர்.சி., ஹவுசிங் நிர்வாக இயக்குனர் பிரசாத் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில், 44 ஆண்டு பாரம்பரியத்துடன் எங்கள் நிறுவனம் மனைப்பிரிவுகள் அமைத்து விற்பனை செய்கிறது. அவிநாசி, ஆட்டையாம்பாளையம், செந்துார் மஹால் அருகே, 38 ஏக்கரில் 5 சென்ட் பரப்பளவு முதல் சைட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

டி.டி.சி.பி., அப்ரூவல், 60, 40 மற்றும் 30 அடி அகலத்தில் சாலை, நான்கு ஏக்கர் பரப்பில் பூங்கா, 24 மணி நேரமும் குடிநீர் வசதி, புதை மின்வட வசதி, கழிவு நீர் வடிகால் உள்ளிட்டவையுடன் சுற்றிலும் காம்பவுண்ட் சுவரும் அமைக்கப்பட்டுள்ளது.

அதே போல் ராக்கியாபாளையத்தில் கே.ஆர்.சி., கார்டனியா லே அவுட்டிலும் பெரும்பாலான சைட்டுகள் விற்பனையாகி விட்டன. வாடிக்கையாளர்களின் எண்ணங்களுக்கு ஏற்ற வகையிலான மனைப்பிரிவுகள் எங்கள் வெற்றிக்கு காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us