/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சவரத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
சவரத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 06, 2024 01:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், மார்ச் 6-
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சவரத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முடி திருத்துவோர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அரசு சிறப்பு சலுகை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு ஹேர்டிரஸசஸ் யூனியன் திருப்பூர் மாவட்டம் சார்பில் குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர மாவட்ட தலைவர் ஜீவமதி தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். மாநகரம், புறநகர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

