/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறிவியல் கல்வி சுற்றுலா: ஆசிரியருக்கு கட்டுப்பாடு
/
அறிவியல் கல்வி சுற்றுலா: ஆசிரியருக்கு கட்டுப்பாடு
ADDED : அக் 30, 2025 11:49 PM
திருப்பூர்:  அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் நடைமுறையில் உள்ளவற்றைக் கண்டறிந்து, அரசுப் பள்ளி மாணவர்கள் அறிவை வளர்க்க 'ஸ்டீம்' (கல்வியின் நிலையான வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு) திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் ஒன்பது முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது.
கல்வித் திறன், வருகைப்பதிவு, முக்கிய தேர்வுகளில் பங்கேற்பு, குழு செயல்பாடுகளில் ஈடுபாடு, கலைத்திருவிழா நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகள், புத்தகம் படிக்கும் பழக்கம், தலைமைத்துவம் ஆகிய பிரிவுகளில் மதிப்பீடு செய்து, மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அரசு அருங்காட்சியகங்கள், கோளரங்கங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் போன்ற இடங் களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இவ்வாறு சுற்றுலா அழைத்துச் செல்லும் போது, 'அருகில் உள்ள பிற மாவட்டங்களையும், பிற மாநிலங்களையும் தேர்வு செய்யலாம்.
கல்வி சுற்றுலாவில் மாணவர்களின் ஒழுக்கத்தை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களை நீர்நிலைகளுக்கு அழைத்து செல்லக் கூடாது.
கல்வி சுற்றுலாவில் மாணவியர் இருந்தால், பெண் ஆசிரியர்கள் கட்டாயம் குழுவில் இடம்பெற வேண்டும்.
நீர்நிலைகள் உள்ள பகுதிகளை தேர்வு செய்ய கூடாது; பாதுகாப்பு கருதி இவ்விதிகளை தவறாது பின்பற்ற வேண்டும்,' என வழிகாட்டுதல் வழங்கப் பட்டுள்ளது.
'ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில இயக்குனரகம் தரப்பில் இருந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது,' என, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

