ADDED : பிப் 03, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில், ஞாயிற்றுக்கிழமைகளில் 60 முதல், 70 டன் மீன் விற்பனை செய்யப்படும். ஞாயிற்றுக்கிழமையான நேற்று, 55 டன் மீன் மட்டுமே விற்பனையானது.
வியாபாரிகள் கூறுகையில், 'நேற்று முகூர்த்த நாள் என்பதால், பெரும்பாலான குடும்பத்தினர் கோவில், திரு மணம், வீடு திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிக்கு அவர்களது உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கு குடும்பமாக சென்றனர். இதனால், வழக்கமான வாடிக்கையாளர்களின் வருகை கூட குறைந்தது' என்றனர்.

