sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புலம்பெயர் தொழிலாளர் பாதுகாப்பு; ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் 23ல் கருத்தரங்கு

/

புலம்பெயர் தொழிலாளர் பாதுகாப்பு; ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் 23ல் கருத்தரங்கு

புலம்பெயர் தொழிலாளர் பாதுகாப்பு; ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் 23ல் கருத்தரங்கு

புலம்பெயர் தொழிலாளர் பாதுகாப்பு; ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் 23ல் கருத்தரங்கு


ADDED : பிப் 21, 2025 12:08 AM

Google News

ADDED : பிப் 21, 2025 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூரில் ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் சார்பில், வெளி மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு கருத்தரங்கம் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது.

பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பீஹார், உ.பி., ஒடிசா உள்ளிட்ட வெளி மாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். விசைத்தறி, கட்டுமானம், எண்ணெய் ஆலை உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களும் ஆயிரக்கணக்கில் உள்ளனர். இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இங்கு தங்கியுள்ளனர்.

வெளி மாநிலம் மற்றும் வேற்று மொழி பேசுவோர் என்ற காரணத்தால், உள்ளூர் மக்களுடனும், பிற மொழி பேசுவோருடனும் பழக வாய்ப்பு குறைவாகவே உள்ளது. பல்வேறு நடைமுறைச் சிக்கல்களுக்கும், தேவையில்லாத பிரச்னைகளுக்கும் இவர்கள் ஆளாகும் நிலை ஏற்படுகிறது.

இந்திய கம்யூ., தொழிற்சங்கமான, ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் திருப்பூரில் வரும் 23ம் தேதி, புலம் பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய செயலாளர் சாத்தி வஹிதா நிஜாம், தேசிய துணை தலைவர் சுப்பராயன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.சட்டரீதியான சம்பளம், தொழிலாளர் நலன் மற்றும் பணியாற்றும் இடத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து விவாதித்து அதற்கான தீர்வு குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

களமிறங்கிய கட்சிகள்

திருப்பூரில் புலம்பெயர் தொழிலாளர் பாதுகாப்பு கருத்தரங்கம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டங்களை பா.ஜ., ஏற்கனவே முன்னெடுத்து நடத்தியுள்ளது. ஹிந்து முன்னணி சார்பிலும் கருத்தரங்குகள் நடந்துள்ளன. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பிலும் இத்தகைய கூட்டம் நடந்துள்ளது. ஓட்டு வங்கியைக் குறிவைத்து இவை நடத்தப்பட்டதாக விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில், பல்வேறு கட்சியினரும், இதுபோன்ற கூட்டங்களை நடத்த துவங்கியுள்ளன.








      Dinamalar
      Follow us