/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிதி முதலீடு விழிப்புணர்வு கல்லுாரியில் கருத்தரங்கம்
/
நிதி முதலீடு விழிப்புணர்வு கல்லுாரியில் கருத்தரங்கம்
நிதி முதலீடு விழிப்புணர்வு கல்லுாரியில் கருத்தரங்கம்
நிதி முதலீடு விழிப்புணர்வு கல்லுாரியில் கருத்தரங்கம்
ADDED : செப் 26, 2024 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், நிதி முதலீடு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், மாணவர்களுக்கான நிதி முதலீடு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இதில், கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார்.
தொழில்நுட்ப வல்லுநர் மணிராம் பங்கேற்று, 'பணவீக்கம், அதற்கான தீர்வு, சேமிப்பு - முதலீடு, பங்குச்சந்தை, பாதுகாப்பான சேமிப்பு முதலீட்டு திட்டங்கள் குறித்து பேசினார்.
பேராசிரியர்களுடன் நிதி முதலீடு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது. மாணவர்களுடன், பேராசிரியர்கள், துறைத்தலைவர்களும் கருத்தரங்கில் பங்கேற்றனர்.