/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.4.13 லட்சத்துக்கு எள் ஏல வர்த்தகம்
/
ரூ.4.13 லட்சத்துக்கு எள் ஏல வர்த்தகம்
ADDED : ஜூன் 17, 2025 09:43 PM
- - நமது நிருபர் -
முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 4.13 லட்சம் ரூபாய்க்கு எள் ஏல வர்த்தகம்நடந்தது.
திருப்பூர் மாவட்டத்தில், விவசாயம் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இதில் பயிர் வகைகளில் எள் பயிரும் அடங்கும். இப்பயிரை, வெள்ளகோவில், முத்துார் பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் பயிரிடுகின்றனர்.
இம்மாவட்டத்தில், வெள்ளகோவில், முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் எள் ஏலம் நடப்பது வழக்கம். ஏலத்தில் சுற்றுவட்டார விவசாயிகள், 18 பேர் பங்கேற்றனர்.
விவசாயிகள் தாங்கள் விளைவித்த, 3,779 கிலோ (51 மூட்டையில்) எள் கொண்டு வந்தனர். இதில், கிலோ 127.19 முதல் 180.19 ரூபாய் வரையும் ஏலம் போனது.
சராசரியாக, 120.19 ரூபாய்க்கு விற்றது. மொத்தம், 3,779 கிலோ எள், 4.13 லட்சம் ரூபாய்க்கு ஏல வர்த்தகம் நடந்ததாக ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகிகள் தெரிவித்தனர்.