sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குடிநீரில் கழிவுநீர் கலப்பு; மக்கள் தவிப்பு

/

குடிநீரில் கழிவுநீர் கலப்பு; மக்கள் தவிப்பு

குடிநீரில் கழிவுநீர் கலப்பு; மக்கள் தவிப்பு

குடிநீரில் கழிவுநீர் கலப்பு; மக்கள் தவிப்பு


ADDED : பிப் 20, 2025 05:51 AM

Google News

ADDED : பிப் 20, 2025 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நிழற்குடை இல்லை

மங்கலம் நால்ரோடு பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இல்லை. நிற்பதற்கும் இடமில்லை. வெயிலில் பயணிகள் நிற்க வேண்டியுள்ளது.

- அருண், மங்கலம்.

வீணாகும் தண்ணீர்

சபாபதிபுரம், குருவாயூரப்பன் கோவில் முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவது தொடர்கதையாக உள்ளது. சாலை சேதமாகிறது.

- சேதுராமன், சபாபதிபுரம்.

n திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன், முனிசிபல் ஆபீஸ் வீதியில் அவ்வப்போது குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.

- வின்சென்ட், ராயபுரம்.

n மங்கலம், வேட்டுவபாளையத்தில் குடிநீர் தொட்டி அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.

- ஷீபா, வேட்டுவபாளையம்.

n திருப்பூர், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நீதிமன்றம் செல்லும் சாலையில் குழாய் உடைந்து தண்ணீர் ஒரு மாதமாக கால்வாயில் வீணாகிறது. அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

- லோகநாதன், பல்லடம் ரோடு.

கம்பத்தில் விரிசல்

திருப்பூர், எஸ்.பெரிய பாளையம் ஊராட்சி, குளத்துப்பாளையத்தில் டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மின் விபத்து ஏற்படும் முன் மாற்ற வேண்டும்.

- மோகன், குளத்துப்பாளையம்.

சாலை சேதம்

n திருமுருகன்பூண்டி - பூலுவபட்டி ரோடு, இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே கழிவுநீர் வழிந்தோடி சாலை சேதமாகியுள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர்.

- ரவி, பூலுவபட்டி.

'துர்நாற்ற' குடிநீர்

திருப்பூர், 41வது வார்டு, முருகம்பாளையம் பாறைக்காடு, 4வது வீதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. துர்நாற்றம் வீசுகிறது. பிரதான குழாய்களை மாநகராட்சி கவனிக்க வேண்டும்.

- கேசவன், பாறைக்காடு.

குப்பை தேக்கம்

திருப்பூர், 58வது வார்டு, கே.செட்டி பாளைம் - முத்தணம்பாளையம் ரோடு, பழநியாண்டவர் நகரில் தேங்கியுள்ள குப்பையை அள்ள வேண்டும். அள்ளப் படாத குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது.

- குரு, பழநியாண்டவர் நகர்.






      Dinamalar
      Follow us