sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரோட்டில் கழிவுநீர் 'குளம்'; போராட மக்கள் களம்

/

ரோட்டில் கழிவுநீர் 'குளம்'; போராட மக்கள் களம்

ரோட்டில் கழிவுநீர் 'குளம்'; போராட மக்கள் களம்

ரோட்டில் கழிவுநீர் 'குளம்'; போராட மக்கள் களம்


ADDED : பிப் 03, 2025 04:15 AM

Google News

ADDED : பிப் 03, 2025 04:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம் : திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு காவிலிபாளையம் ஆனந்தா அவென்யூ குடியிருப்பில் ஏராளமான வீடுகள் உள்ளன.

வீடுகளில் இருந்து வெளி வரும் கழிவுநீர் செல்ல 'டிஸ்போசல் பாயின்ட்' இல்லை. இதனால் கழிவுநீர், - கணியாம்பூண்டி செல்லும் ரோட்டில் குளம்போல் தேங்கி வருகிறது. தேங்கும் கழிவு நீரால் ரோடு சேறும் சகதியுமாக போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

மாநகராட்சி முதலாம் மண்டல அதிகாரிகள் கழிவுநீர் ரோட்டுக்கு வருவதை தடுக்கும் வகையில் ஆனந்தா அவன்யூ குடியிருப்பு மக்கள் வீட்டு முன் 'சோக்பிட்' அமைத்து கழிவுநீரை தேக்க வலியுறுத்தினர். இதை பலரும் அமைத்து உள்ளனர். சிலர் மறுத்து வருகின்றனர். இதனால், கழிவுநீர் ரோட்டில் தேங்குவது தொடர் கதையாகி வருகிறது.

வார்டு கவுன்சிலர் தங்கராஜ் கூறுகையில், ''இந்த பிரச்னை நான்கு ஆண்டாக உள்ளது. பல முறை அதிகாரியிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. கழிவுநீர் தேக்கத்தால் போக்குவரத்து பாதிப்பதோடு, தொடர் விபத்து ஏற்படுகிறது. அதிகாரிகளை கண்டித்து, வரும் 5ம் தேதி சாலை மறியலில் ஈடுபட உள்ளோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us