/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சவர தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு
/
சவர தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜன 29, 2025 03:36 AM

திருப்பூர்; திருப்பூர் மாநகர் மாவட்ட சங்கத்தின் பொது உறுப்பினர் கூட்டம், ஊத்துக்குளி ரோடு கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு ஆகியன நடந்தது. மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார்.
கிளை நிர்வாகிகள், நாட்ராயன், திருநாவுக்கரசு, கணேசன், ராஜேந்திரன், ஆனந்தன், பஞ்சலிங்கம் முன்னிலை வகித்தனர்.மாநகர அமைப்பு செயலாளர் ராஜேந்திரன் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்தினார். மாநில நிர்வாகிகள் ஜீவமதி, சதீஸ்குமார், மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பேசினர்.
சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக, தலைவர் நாட்ராயன், செயலாளர் முத்துக்கிருஷ்ணன், பொருளாளர் தத்தப்பன், துணை தலைவர் துரைசாமி; துணை செயலாளர் பிரபாகரன், மாவட்ட பிரதிநிதி அரசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

