ADDED : ஏப் 28, 2025 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார் : பொங்கலுார், குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார்.
இவரது தோட்டத்தில் நேற்று இரவு கட்டியிருந்த குட்டி, வெள்ளாடு மற்றும் கோழியை வெறிநாய் கடித்து விட்டது. இதில் வெள்ளாடு இறந்தது. காங்கயம் அருகே கோட்டைபாளையத்தைச் சேர்ந்தவர் ரத்தினசாமி; விவசாயி. இவரது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஏழு ஆடுகளை நேற்று மதியம் வெறிநாய்கள் கடித்துக் கொன்று விட்டன. கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

