sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிவாலயங்கள் கோலாகலம்

/

சிவாலயங்கள் கோலாகலம்

சிவாலயங்கள் கோலாகலம்

சிவாலயங்கள் கோலாகலம்


ADDED : அக் 04, 2025 11:26 PM

Google News

ADDED : அக் 04, 2025 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: புரட்டாசி மாத வளர்பிறை சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று திருப்பூர் பகுதியில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜையில் முன்னதாக நந்திகேஸ்வரருக்கு பல்வேறு திரவியங்களால் அபிேஷகம் நடத்தி, அலங்காரம் செய்து மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜை நடந்து, ரிஷப வாகனம் மீது உமா மகேஸ்வரராக உற்சவர் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபுராணம் பாராயணம் செய்து எம்பெருமானை வழிபட்டனர்.

இதேபோல், நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், வெள்ளகோவில் மயில்ரங்கம் வைத்தீஸ்வரர் கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில், கருவலுார் கங்காதீஸ்வரர் கோவில், சேவூர் வாலீஸ்வர சுவாமி கோவில், நடுவச்சேரி கோதைப்பிராட்டீஸ்வரர் கோவில், பொங்கலுார் அலகுமலை ஆதி கைலாசநாதர் கோவில், சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் நேற்று சனி மஹா பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தது.

டி.பி.என். காலனி காசி விஸ்வநாதர் கோவில், லட்சுமி நகர் அண்ணாமலையார் கோவில், விராலிக்காடு சென்னியாண்டர் கோவில் - காசி விஸ்வநாதர் சன்னதி, பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவில் - காசி விஸ்வநாதர் சன்னதி உள்ளிட்ட அனைத்து பகுதி சிவாலயங்களிலும் நேற்று சனி மஷா பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இவற்றில் திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us