/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சணல் பொருள் தயாரிப்பு பயிற்சி நாளை துவக்கம்
/
சணல் பொருள் தயாரிப்பு பயிற்சி நாளை துவக்கம்
ADDED : அக் 04, 2025 11:25 PM
திருப்பூர்: திருப்பூர், காங்கயம் ரோடு, முதலிபாளையம் பிரிவில் கனரா வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இதில், இரண்டு வார இலவச சணல் பொருள் தயாரிப்பு பயிற்சி வகுப்புகள் நாளை (6ம் தேதி) துவங்குகிறது.
எழுதப் படிக்க தெரிந்த, 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரும் இதில் சேரலாம். பயிற்சிக்கு எந்த கட்டணமும் இல்லை; முற்றிலும் இலவசம். இருபாலருக்கும் தனித்தனி தங்கும் விடுதி வசதி உள்ளது. காலை-, மாலை தேநீர் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் அனுமதி பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். விவரங்களுக்கு, 94890 43923 மற்றும் 99525 18441 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.