sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிவளாபுரி அம்மன் குண்டம் திருவிழா; நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

/

சிவளாபுரி அம்மன் குண்டம் திருவிழா; நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

சிவளாபுரி அம்மன் குண்டம் திருவிழா; நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

சிவளாபுரி அம்மன் குண்டம் திருவிழா; நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்


ADDED : ஏப் 23, 2025 07:04 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; அவிநாசி அருகே நடுவச்சேரியிலுள்ள சிவளாபுரி அம்மன் கோவிலில், 39ம் ஆண்டு குண்டம் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கடந்த 20ம் தேதி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று முன்தினம் தீர்த்த குடம், பூச்சட்டி, கரகம் எடுத்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சியை தொடர்ந்து வேல் பூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை குதிரை உத்தரவு பெறுதல், படைக்கலம் எடுத்து வருதலை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த குண்டம் இறங்கினர்.

விழாவில், இன்று மறு பூஜை, மஞ்சள் நீர், அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் குண்டம் திருவிழா நிறைவுபெறுகிறது. குண்டம் விழாவை முன்னிட்டு விழாக் குழுவினர், முறைக்கட்டு மிராசுகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us