ADDED : பிப் 10, 2025 11:45 PM
திருப்பூர்; திருப்பூர் பகுதி சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தது.
திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தது. முன்னதாக நந்திகேஸ்வரருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது.
சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. வெள்ளி ரிஷப வாகனம் மீது தம்பதி சமதேராக உற்சவர் எழுந்தருளினார். திருவீதியுலா நடந்தது.
எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர், நல்லுார் விஸ்வேஸ்வரர், அவிநாசி லிங்கேஸ்வரர், பழங்கரை பொன் சோழீஸ்வரர், லட்சுமி நகர் அண்ணாமலையார், டி.பி.ஏ., காலனி காசி விஸ்வநாதர், சாமளாபுரம் சோளீஸ்வரர், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் - காசி விஸ்வநாதர் சன்னதி, அலகுமலை கைலாசநாதர் உள்ளிட்ட திருப்பூர் பகுதி சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
உற்சவர் தம்பதி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து அருள் பாலித்தார்.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.