sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கடையை உடைத்து 3.5 லட்சம் கொள்ளை

/

கடையை உடைத்து 3.5 லட்சம் கொள்ளை

கடையை உடைத்து 3.5 லட்சம் கொள்ளை

கடையை உடைத்து 3.5 லட்சம் கொள்ளை


ADDED : டிச 29, 2024 11:48 PM

Google News

ADDED : டிச 29, 2024 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலையில், மளிகை கடையின் மேற்கூரையை உடைத்து, 3.5 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை நகரம், பழநி ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில், செல்வகணேஷ் மளிகை கடை செயல்பட்டு வருகிறது. கடையின் மறுபகுதியில், வாரச்சந்தையின் சுற்றுச்சுவர் அமைந்துள்ளது.

இந்த கடையை நேற்று காலை பணியாளர்கள் திறந்த போது, மேற்கூரை சேதமடைந்தது தெரியவந்தது. இது குறித்து உடுமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில், கடையின் மேற்கூரையை உடைத்து, உள்ளே வைக்கப்பட்டிருந்த 3.5 லட்ச ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும், கடையின் 'சிசிடிவி' கேமராவுக்குரிய 'ஹார்ட் டிஸ்க்' கும் திருடு போயிருந்தது.

இது குறித்து உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள வணிக வளாகத்திலுள்ள கடையில், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us