sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு அலுவலர்களுக்கான கையெழுத்து போட்டி; 80 பேர் பங்கேற்று அசத்தல்

/

அரசு அலுவலர்களுக்கான கையெழுத்து போட்டி; 80 பேர் பங்கேற்று அசத்தல்

அரசு அலுவலர்களுக்கான கையெழுத்து போட்டி; 80 பேர் பங்கேற்று அசத்தல்

அரசு அலுவலர்களுக்கான கையெழுத்து போட்டி; 80 பேர் பங்கேற்று அசத்தல்


ADDED : மே 01, 2025 11:40 PM

Google News

ADDED : மே 01, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூரில் மாவட்ட அளவில் அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கான கையெழுத்து மற்றும் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 80 பேர் பங்கேற்றனர்.

பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு, அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் வார விழா கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் துவங்கி வரும் 5 ம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்றுமுன்தினம், மாவட்ட அளவில் அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கான கையெழுத்து மற்றும் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டன.

இவ்விரு போட்டிகளிலும் அரசு அலுவலர்கள், 80 பேர் பங்கேற்றனர். தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் இளங்கோ துவக்கி வைத்தார்.

கையெழுத்து போட்டியில், அரசு அலுவலர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, தமிழில், நேர்த்தியாக எழுதினர். சிறப்பான வகையில் கையெழுத்து எழுதிய, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் பணிபுரியும் அருண்குமார் முதலிடம்; ஆதிதிராவிடர் நலத்துறை அபி இரண்டாமிடம்; மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் துளசிமணி மூன்றாமிடம் பிடித்தனர்.

ஆறு பேர் அடங்கிய அரசு அலுவலர்கள் ஒரு குழுவாக உருவாக்கி, மொத்தம் ஆறு குழுக் களுக்குள் வினாடி - வினா நடத்தப்பட்டது.

தமிழ் மொழி வரலாறு சார்ந்த கேள்விகள் எழுப்பப்பட்டன. வினாடி - வினாவில், தேர்தல் பிரிவை சேர்ந்த சக்திவேல், முகமது ெஷரீப், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் அருண்குமார், மாவட்ட கல்வி அலுவலகம் சுரேஷ்குமார், கூட்டுறவு துறை விஷ்ணு, ஆதிதிராவிடர் நலத்துறை சங்கீதா ஆகிய ஆறுபேர் குழுவினர் முதலிடம் பிடித்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு அலுவலர்களுக்கு, கலெக்டர் கிறிஸ்துராஜ், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் ஆகியோர், புத்தகங்கள் பரிசளித்து, பாராட்டினர். இன்று அரசு அலுவலர்களுக்கு பேச்சுப்போட்டி, கவிதை, புதினம் வாசித்தல், கதை சொல்லும் போட்டிகள்; 5ம் தேதி, அரசு துறை சார்ந்த கடிதம் எழுதும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us