sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிங்கனுார் வனபத்ரகாளி கோவில் குண்டம் விழா

/

சிங்கனுார் வனபத்ரகாளி கோவில் குண்டம் விழா

சிங்கனுார் வனபத்ரகாளி கோவில் குண்டம் விழா

சிங்கனுார் வனபத்ரகாளி கோவில் குண்டம் விழா


ADDED : ஏப் 09, 2025 07:13 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 07:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; பல்லடம் அருகே, சிங்கனுார் கொண்டத்து வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா விமரிசையாக நடந்தது.

பல்லடத்தை அடுத்த, கணபதிபாளையம் ஊராட்சி, சிங்கனுார் கிராமத்தில் கொண்டத்து வனபத்ர காளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், 21ம் ஆண்டு குண்டம் திருவிழா, கடந்த மார்ச், 13ல் துவங்கியது.

தொடர்ந்து, பூச்சாட்டுதல், ஆயக்கால் போடுதல் நடந்தன. ஏப்., 2ம் தேதி, கிராம சாந்தி, கொடியேற்றத்துடன் குண்டம் திருவிழா துவங்கியது. இதனை யடுத்து, வசந்த விழா, சீர்வரிசை கொண்டு வருதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், அம்மன் திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை, 7.00 மணிக்கு, குண்டம் திறப்பு பூப்போடுதல், பூவோடு எடுத்தல், அம்மை அழைத்தல் நடைபெற்றது.

நேற்று காலை, 7.00 மணிக்கு குண்டம் இறங்குதல் நடந்தது. 'ஓம் சக்தி பராசக்தி' என்ற கோஷம் முழங்க பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செய்தனர். வெண்ணை காப்பு அலங்காரத்தில் கொண்டத்து வன பத்திர காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் விழா குழு சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது. இன்று, மறுபூஜை அபிஷேகம், மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us