sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சீதாராமர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

/

சீதாராமர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

சீதாராமர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

சீதாராமர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்


ADDED : ஏப் 06, 2025 09:49 PM

Google News

ADDED : ஏப் 06, 2025 09:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை ஆனந்த சாய் கோவிலில் சீதாராமர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாய் நடந்தது.

உடுமலை, தில்லை நகர் ஆனந்தசாய் கோவிலில், ராமநவமியையொட்டி 4ம் தேதி முதல் சிறப்பு வழிபாடு நடந்தது. முதல் நாள் காலையில் கணபதி ேஹாமத்துடன் ராம நவமி விழா துவங்கியது.

தொடர்ந்து சுவாமிக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. காலை, 11:00 மணிக்கு ராமநாம சங்கீர்த்தனம், விஷ்ணுசகஸ்ரநாமம், சாய் சத்சரித பாராயணம் நடந்தது. சுவாமிக்கு மதிய ஆரத்தி, மாலை ஆரத்தி, இரவு ஆரத்தி வழிபாடுகள் நடந்தது.

நேற்று சீதாராமர் திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, சாய்பாபாவிற்கு சிறப்பு அபிேஷக மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து திருமண சடங்குகள் துவங்கியது.

கணபதி ேஹாமம், யாகசாலை பூஜை, திருமாங்கல்ய பூஜை நடந்தது. திருமண உற்சவத்துக்கான சீர்வரிசை தட்டுகள் பல்வேறு பொருட்களுடன் வைக்கப்பட்டன. மணமக்களுக்கு திருமண காப்பு கட்டப்பட்டது.

தொடர்ந்து சுவாமிக்கு திருமாங்கலம் சாற்றப்பட்டது. மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. 'ஜெய் ஸ்ரீராம்' என பக்தர்கள் கோஷமிட்டு, திருமண வைபவத்தை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

சிறப்பு அலங்காரத்துடன் திருமண கோலத்தில் சீதாராமர் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

* உடுமலை நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சேய சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி


பொள்ளாச்சி சத்திரம்வீதி சீதாராம ஆஞ்சநேய சுவாமி கோவில் மற்றும் ஸ்ரீராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனத்தில், ராம நவமி ரதோற்சவ விழா கடந்த மாதம், 30ம் தேதி துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று, ராமநவமியை முன்னிட்டு, தேர்த்திருவிழா நடந்தது. சீதாராமர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள், கோலாட்டம் ஆடியபடி தேர் முன் சென்றனர். இன்று, புஷ்பபல்லக்கு திருவீதி உலாவும் நடைபெறவுள்ளது.

* ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், ராமநவமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில் ராமபிரான், சீதாதேவிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்பராம்பாளையம் குளத்துார் கோதண்டராமர் கோவில், கோட்டாம்பட்டி டி. கோதண்டராமர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் ராமநவமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

- நிருபர் குழு -






      Dinamalar
      Follow us