sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

படுத்த படுக்கையாக கிடந்த 70 வயதான தாய் கொலை தாராபுரம் அருகே மகன் கைது

/

படுத்த படுக்கையாக கிடந்த 70 வயதான தாய் கொலை தாராபுரம் அருகே மகன் கைது

படுத்த படுக்கையாக கிடந்த 70 வயதான தாய் கொலை தாராபுரம் அருகே மகன் கைது

படுத்த படுக்கையாக கிடந்த 70 வயதான தாய் கொலை தாராபுரம் அருகே மகன் கைது


ADDED : ஜூன் 16, 2025 03:48 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரம் அருகே படுத்த படுக்கையாக கிடந்த தாயை, கழுத்தை அறுத்து கொன்ற மகனை, போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனுார், மால-மேட்டை சேர்ந்தவர் ராஜகோபால், 42; சென்ட்ரிங் தொழிலாளி. மனைவி, ஏழு ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். இவரின் தாயார் மாரியம்மாள், 70; தாயுடன் வசிக்கிறார். உடல் நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக படுத்த படுக்கையாக கிடந்தார். அவரது தங்கை ஏசம்மாள், அவ்வப்போது வந்து குளிக்க வைத்து, துணி மாற்றி விட்டு செல்வார். நேற்று முன்-தினம் மதியம்

வழக்கம்போல் பணிவிடை செய்ய வந்த ஏசம்மாள், மொபைல்-போனில் ராஜகோபாலை அழைத்தார். மலம் கழித்தபடி கிடந்த சகோதரியை சுத்தம் செய்த பிறகு, தாயாரை பார்த்து கொள்ள முடி-யாதா?, என்னால் முடியவில்லை என்று புலம்பிவிட்டு, வீட்டுக்கு வெளியே துணியை காயப்போட சென்றுள்ளார்.

அப்போது குடிபோதையில் இருந்த ராஜகோபால், வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால், மாரியம்மாளின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்-படி சென்ற மூலனுார் போலீசார், ராஜகோபாலை கைது செய்-தனர். இச்சம்பவம் அப்பகுதியில்

பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us