sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறப்பு கடன் தீர்வு திட்டம்; கூட்டுறவு துறை அறிவிப்பு

/

சிறப்பு கடன் தீர்வு திட்டம்; கூட்டுறவு துறை அறிவிப்பு

சிறப்பு கடன் தீர்வு திட்டம்; கூட்டுறவு துறை அறிவிப்பு

சிறப்பு கடன் தீர்வு திட்டம்; கூட்டுறவு துறை அறிவிப்பு


ADDED : டிச 03, 2024 11:50 PM

Google News

ADDED : டிச 03, 2024 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; கூட்டுறவு துறை திருப்பூர் இணைப் பதிவாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

கோவை, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் திருப்பூர் மண்டலத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், ஊரக வளர்ச்சி வங்கி, வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் வாயிலாக பெறப்பட்ட சிறு வணிக கடன், தொழில் கடன், வீட்டு வசதி கடன் உள்ளிட்ட பண்ணைசாரா கடன்களுக்கான சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில், நடப்பாண்டு செப்., 12ம் தேதிக்கு முன், 25 சதவீத தொகையை செலுத்தி, ஒப்பந்தம் மேற்கொள்ளாதவர்களும், ஒப்பந்தம் மேற்கொண்டும் எஞ்சிய 75 சதவீத தொகை செலுத்தாதவர்களும், தற்போது மொத்த கடன் தொகையையும் ஒரே தவணையில் செலுத்தி, கடன்களை தீர்வு செய்து கொள்ளலாம்.

கடந்த 2022, டிச. 31ல் முழுமையாக தவணை தவறி, மூன்று ஆண்டுகளுக்கு மேலான மத்திய கால வேளாண் கடன்கள், பயிர்க்கடனாக வழங்கப்பட்டு மத்திய கால வேளாண் கடனாக மாற்றம் செய்யப்பட்ட கடன்கள், பண்ணை சார்ந்த நீண்டகால கடன்கள், மகளிர் தொழில்முனைவோர் கடன்களுக்கும் தீர்வு காணலாம். 9 சதவீத சாதாரண வட்டியுடன் நிலுவை தொகையை, வரும் 2025, மார்ச் 12ம் தேதிக்குள் ஒரே தவணையில் செலுத்தி, தீர்வு செய்துகொள்ளலாம். தவணை தவறிய கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us