sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தைப்பட்டம் செழிக்க சிறப்பு வழிபாடு; திருமூர்த்திமலையில் திரண்ட பக்தர்கள்

/

தைப்பட்டம் செழிக்க சிறப்பு வழிபாடு; திருமூர்த்திமலையில் திரண்ட பக்தர்கள்

தைப்பட்டம் செழிக்க சிறப்பு வழிபாடு; திருமூர்த்திமலையில் திரண்ட பக்தர்கள்

தைப்பட்டம் செழிக்க சிறப்பு வழிபாடு; திருமூர்த்திமலையில் திரண்ட பக்தர்கள்


ADDED : ஜன 29, 2025 08:40 PM

Google News

ADDED : ஜன 29, 2025 08:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; தை அமாவாசையை முன்னிட்டு, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, ரேக்ளா வண்டிகளில் பயணித்து, தைப்பட்டம் செழிக்க, மும்மூர்த்திகளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திருமூர்த்திமலையில், பிரம்மா, சிவன், விஷ்ணு என, மும்மூர்த்திகள் ஒருங்கே அருள்பாலிக்கும் அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், ஆடி மற்றும் தை அமாவாசையன்று நடைபெறும் சிறப்பு பூஜைகளில், திரளான பக்தர்கள் பங்கேற்பர்.

இந்தாண்டு, தைப்பட்டம் செழிக்க, நேற்று முன்தினம் முதலே ரேக்ளா வண்டிகளில், திருமூர்த்திமலையை நோக்கி பக்தர்கள் பயணித்தனர்.

இரவு முழுவதும் அங்கேயே தங்கி, அதிகாலை முதல், அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு அலங்கார பூஜைகளில், தைப்பட்டம் செழிக்க வழிபாடு செய்தனர்.

ரேக்ளா வண்டிகளின் அணிவகுப்பால், திருமூர்த்திமலை ரோடு முழுவதும் திருவிழா கோலமாக காட்சியளித்தது. மேலும், கோவில் அருகிலுள்ள, பாலாற்றின் கரையில், முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.

உடுமலையில் இருந்து திருமூர்த்திமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் கூறுகையில், 'ஆடி மற்றும் தைப்பட்டம் செழிக்க, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், வழிபாடு செய்வதை பாரம்பரியமாக பின்பற்றுகிறோம். ரேக்ளா பந்தயத்துக்கு தயார்படுத்தும் காளைகளையும், வண்டிகளில் பூட்டி, கோவிலுக்கு அழைத்து வந்து, பூஜை செய்கிறோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us