sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பிரதோஷ நாளில் மலர்ந்த புத்தாண்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

/

 பிரதோஷ நாளில் மலர்ந்த புத்தாண்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

 பிரதோஷ நாளில் மலர்ந்த புத்தாண்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

 பிரதோஷ நாளில் மலர்ந்த புத்தாண்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு


ADDED : ஜன 02, 2026 05:44 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் பகுதி சிவாலயங்களில் நேற்று, பிரதோஷ பூஜைகள் நடைபெற்றன; பக்தர்கள் திரளானோர் பங்கேற்று, வழிபாடு நடத்தினர்.

நேற்று (2026) ஆங்கில புத்தாண்டின் முதல் நாளே, சிவ வழிபாட்டுக்கு உகந்த பிரதோஷ தினமாக அமைந்தது. இதையடுத்து, திருப்பூர் சுற்றுப்பகுதி சிவாலயங்களில், பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன. திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் மற்றும் அனைத்துப்பகுதியில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. நந்திகேஸ்வரருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியன நடைபெற்றது.

இதேபோல், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதுதவிர, லட்சுமி நகர் அண்ணாமலையார் கோவில், டி.பி.ஏ., காலனி காசி விஸ்வநாதர் கோவில், சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் - காசி விஸ்வநாதர் சன்னதி, அலகுமலை கைலாசநாதர் கோவில், பூச்சக்காடு செல்வவிநாயகர் கோவில் - சொக்கநாதர் சன்னதி, உள்ளிட்ட திருப்பூர் பகுதி சிவாலயங்களில் பிரதோஷம் முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

இச்சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us