/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதுகுத்தண்டு பாதித்தோருக்கு ஸ்கூட்டர் தராமல் இழுத்தடிப்பு
/
முதுகுத்தண்டு பாதித்தோருக்கு ஸ்கூட்டர் தராமல் இழுத்தடிப்பு
முதுகுத்தண்டு பாதித்தோருக்கு ஸ்கூட்டர் தராமல் இழுத்தடிப்பு
முதுகுத்தண்டு பாதித்தோருக்கு ஸ்கூட்டர் தராமல் இழுத்தடிப்பு
ADDED : ஏப் 24, 2025 06:33 AM

திருப்பூர்; தமிழ்நாடு முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் சங்க (டி.என்.எஸ்.டி.ஏ.,) பொதுச்செயலாளர் லலித்குமார் நடராஜன் தலைமையில், இணை பொருளாளர் வேலுச்சாமி உள்பட சங்க உறுப்பினர்கள் 15 பேர், கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து, மனு அளித்தனர்.
பொதுச்செயலாளர் கூறியதாவது:
முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் பிரச்னைகள், எதிர்பார்ப்புகள் குறித்து தமிழக முதல்வருக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்.
முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் பிரத்யேக பேட்டரி வீல் சேருக்கு, ஐந்து ஆண்டுகள் இலவச உதிரி பாகங்களுடன் கூடிய சர்வீஸ் உறுதி செய்யப்படவேண்டும்.
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளில் முதுகு தண்டுவடம் பாதித்த ஒரே ஒரு பயனாளிக்கு மட்டுமே, பிரத்யேக ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பல மாதங்களாகியும் காத்திருக்கும் அனைவருக்கும் விரைந்து ஸ்கூட்டர் வழங்க வேண்டும்.
புதிதாக பதிவு செய்யப்படும் மாற்றுத்திறனாளிகள், மாதாந்திர உதவித்தொகை மற்றும் பராமரிப்பு உதவித்தொகை கிடைப்பதில் காலதாமதங்களைத் தவிர்க்கவேண்டும்.
முதுகு தண்டுவடம் பாதித்தோருக்கு, 'மக்களை தேடி' மருத்துவம் திட்டத்தில், வீடு தேடிச் சென்று பிசியோதெரபி சிகிச்சை அளிக்கவேண்டும். அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தும்வகையிலான கட்டமைப்புகளுடனான வீடுகள் கட்டிக்கொடுக்கவேண்டும்.
முதுகு தண்டுவடம் பாதித்தோர்,  படுக்கை புண், சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் போது, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறவேண்டியுள்ளது. திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், முதுகு தண்டு பாதித்த மாற்றுத்திறனாளிகள் வீல் சேரில் சென்று பயன்படுத்தும்வகையிலான கழிப்பிட வசதி இல்லை. அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் சுயமாக பயன்படுத்தும்வகையிலான கழிப்பிட வசதி ஏற்படுத்தவேண்டும்.
தமிழக அரசு, முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றிவைத்து, வாழ்வாதாரத்தை உறுதி செய்யவேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
----
கலெக்டரை 'கட்' செய்ய வேண்டும்
--------------------------
பொதுச்செயலாளர் லலித்குமார் நடராஜன் உள்ளிட்ட தமிழ்நாடு முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் சங்க நிர்வாகிகள்.

