/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளையாட்டு போட்டி: காரத்தொழுவு அரசு பள்ளி அசத்தல்
/
விளையாட்டு போட்டி: காரத்தொழுவு அரசு பள்ளி அசத்தல்
ADDED : செப் 23, 2024 10:55 PM

உடுமலை : காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில், குறுமையம், மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
உடுமலை குறுமைய அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கும், அதை தொடர்ந்து மாநில அளவிலான போட்டிக்கும் தகுதி பெறுகின்றனர்.
இவ்வாறு நடந்த போட்டிகளில், காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர். அதில், உடுமலை குறுமைய அளவிலான மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியில், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் முதலிடம் பெற்றனர். த்ரோபால் போட்டியில் மாணவர்களுக்கான ஜூனியர் பிரிவில் முதலிடத்தில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளடங்கிய மண்டல அளவிலான போட்டியில் காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், ஹரிதாஸ், ஹரிகார்த்திக், விஷ்ணுபிரகாஷ் உள்ளிட்ட மூன்று மாணவர்களும் மண்டல அளவில் தேர்வாகி, மாநில போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
இவ்வாறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் விஜயன், கார்த்திகேயன், பள்ளி தலைமையாசிரியர் கார்த்திகேயன், பள்ளி மேலாண்மைக் குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.