sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில் கோவில்வழியில் வசந்தம் வீசப்போகுது 

/

'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில் கோவில்வழியில் வசந்தம் வீசப்போகுது 

'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில் கோவில்வழியில் வசந்தம் வீசப்போகுது 

'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில் கோவில்வழியில் வசந்தம் வீசப்போகுது 


ADDED : ஜூலை 03, 2025 12:24 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:

'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், கோவில்வழி அருகே உள்ள வசந்தம் நகரில், மகாகனி, தேக்கு, நாவல், சப்போட்டா மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.

'வனத்துக்குள் திருப்பூர்' என்ற, மரம் வளர்க்கும் திட்டம், எதிர்பார்த்ததை காட்டிலும் விஸ்வரூப வெற்றி பெற்றுள்ளது. வானம்பார்த்த பூமியாக, வான்மழையை நம்பியிருந்த தரிசு நிலங்கள் கூட, பசுமை பொங்கும் மரங்கள் நிறைந்த குறுங்காடுகளாக மாற்றி காண்பித்துள்ளனர்.

'மரம் விவசாயிகளுக்கு சொந்தம்… சுத்தமான காற்று மக்களுக்கு சொந்தம்' என்று, இத்திட்டம் துவங்கப்பட்டது. எதிர்பாராத அளவுக்கு, மரம் வளர்ந்த இடங்களில், பூச்சிகள், பறவைகள், பாம்பு உள்ளிட்டவை தஞ்சமடைந்தன; அத்தகைய பகுதிகளில், பல்லுயிர் பெருக்க சூழல் உருவாகியுள்ளது.

திருப்பூரை அடுத்துள்ள கோவில்வழி - வசந்தம் நகர் பகுதியில், நேற்று மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. எஸ்.எஸ்.எஸ்., கார்டன் பாலசுப்பிரமணியன், சாந்தி என்பவர்களுக்கு சொந்தமான நிலத்தில், 326 மரக்கன்றுகள் நடப்பட்டன. மகோகனி - 210, தேக்கு - 110, நாவல்மற்றும் சப்போட்டா மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன.

'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us