sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா கோலாகலம்

/

ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா கோலாகலம்

ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா கோலாகலம்

ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா கோலாகலம்


ADDED : ஜூலை 29, 2025 11:45 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; ஓம் சக்தி… பராசக்தி' என்று கோஷமிட்டபடி, ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழாவில், பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபட்டனர்.

திருப்பூரின் காவல் தெய்மாகிய ஸ்ரீசெல்லாண்டியம்மன் கோவில், ஆடி குண்டம் திருவிழா 21 ம் தேதி மகாமுனி பூஜையுடன் துவங்கியது; 22 ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல், நொய்யலில் இருந்து சக்தி அழைத்தல்; 23ம் தேதி பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

பல்வேறு வழிபாடுகளுக்கு பிறகு, கடந்த, 27 ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது; நேற்று காலை, குண்டம் திருவிழா நடந்தது. அதிகாலையில், காப்பு கட்டிய பக்தர்கள் வரிசையில் இருந்தபடி, குண்டம் இறங்கினர். தலைமை பூசாரி, அருளாளர்கள் குண்டம் இறங்கிய பின், பக்தர்கள், 'ஓம்சக்தி... பராசக்தி' என்று கோஷமிட்டபடி குண்டம் இறங்கி வழிபட்டனர்.

தொடர்ந்து அம்மனுக்கு, மகா அபிேஷகம், அக்னி அபிேஷகம், மாவிளக்கு மற்றும் பொங்கல் விழா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய செல்லாண்டியம்மன், மாலையில் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மஞ்சள்நீர் விழாவும், 1 ம் தேதி மறுபூஜையும் நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us