/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூரில் ஸ்ரீசரண் கருத்தரித்தல் மையம்; 'குழந்தை ஒரு கனவல்ல' தாரக மந்திரம்
/
திருப்பூரில் ஸ்ரீசரண் கருத்தரித்தல் மையம்; 'குழந்தை ஒரு கனவல்ல' தாரக மந்திரம்
திருப்பூரில் ஸ்ரீசரண் கருத்தரித்தல் மையம்; 'குழந்தை ஒரு கனவல்ல' தாரக மந்திரம்
திருப்பூரில் ஸ்ரீசரண் கருத்தரித்தல் மையம்; 'குழந்தை ஒரு கனவல்ல' தாரக மந்திரம்
ADDED : பிப் 19, 2025 10:54 PM
திருப்பூர்; திருப்பூர், பி.என்., ரோடு போயம்பாளையம் பிரிவில் உள்ள ஸ்ரீசரண் மருத்துவமனையில் சரண் கருத்தரித்தல் மையம், கடந்த 10 ஆண்டாகச் செயல்பட்டு வருகிறது.
மருத்துவமனை தலைமை மகப்பேறு மருத்துவர் டாக்டர் மணிமேகலை பழனிசாமி கூறியதாவது:
இங்கு அதிநவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஐ.யு.ஐ., ஐ.வி.எப்., மற்றும் ஐ.சி.எஸ்.ஐ., போன்ற கருத்தரிப்பு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோவை, சென்னை போன்ற பெருநகரங்களில் வழங்கப்படும் அனைத்து சிகிச்சைகளும் திருப்பூரில் கிடைக்கும் வகையிலான மையமாகத் திகழ்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரசவங்களைச் செய்து, அதிக வெற்றிவாய்ப்புகளுடன் திருப்பூரின் முன்னணி கருத்தரித்தல் மையமாக உள்ளது. மகப்பேறு மற்றும் மகளிருக்கான அனைத்து சிகிச்சைகளும் அனுபவம் வாய்ந்த சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு வழங்கப்படுகிறது. இவ்வாறு, மணிமேகலை பழனிசாமி கூறினார்.
'குழந்தை இனி ஒரு கனவல்ல என்பதை தாரக மந்திரமாக கொண்டு செயல்படும் இம்மையத்தில் தம்பதியர் பயன்பெறும் வகையில் அவ்வப்போது இலவச முகாம்களும் நடக்கின்றன. உலக மகளிர் தினத்தையொட்டி வரும் மார்ச் 8ல் மகளிருக்கான இலவச மருத்துவ முகாம் இங்கு நடைபெற உள்ளது'' என்று மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பழனிசாமி கூறினார். மேலும் விவரங்களுக்கு: 8220 800 800/94425 44458.