/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில மன்ற போட்டி; அரசு பள்ளி மாணவி வெற்றி
/
மாநில மன்ற போட்டி; அரசு பள்ளி மாணவி வெற்றி
ADDED : ஏப் 01, 2025 10:02 PM

உடுமலை, ; மாநில அளவிலான மன்ற போட்டியில் வெற்றி பெற்ற,உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு இலக்கிய மன்றம், வினாடி - வினா மன்றம், சிறார் திரைப்பட மன்றங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு மன்றங்களின் சார்பில், மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்படுகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மாநில அளவில் மன்ற செயல்பாடுகளுக்கான பயிற்சி பட்டறை, சென்னையில் மூன்று நாட்கள் நடந்தது.
இதில், உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவி அர்ஷின்சனா, சிறந்த சிறார் திரைப்பட இயக்குனருக்கான மாநில அளவிலான பயிற்சியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. இம்மாணவிக்கு, பள்ளி தலைமையாசிரியர் விஜயா, உதவி தலைமையாசிரியர் ஜெயராஜ், இலக்கிய மன்ற செயலாளர் சின்னராசு, சிறார் திரைப்பட மன்ற பொறுப்பாசிரியர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.

