ADDED : ஜூலை 14, 2025 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், காங்கயம் ரோடு, சங்கிலிப்பள்ளம் பாலத்தின் வடபுறம், காலியிடம் இருப்பதால், அடிக்கடி குப்பை கொட்டப்படுகிறது.
சமூக விரோதிகள், இரவு நேரத்தில் குப்பைக்கு தீ வைத்து விடுகின்றனர். புகை உருவாகி, அவ்வழியாக சென்று வருவோரை பாடாய்ப்படுத்துகிறது. இரு நாட்களாக, சங்கிலிப்பள்ளம் ஓடை புகை மண்டலமாக காட்சியளிப்பதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாநக ராட்சி நிர்வாகம், ஓடைக்குள் குப்பை கொட்ட முடியாதபடி, கம்பிவேலி அமைக்க வேண்டும்.

