sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தெருநாய்கள் 'கொல வெறி': விரக்தியில் விவசாயிகள்

/

தெருநாய்கள் 'கொல வெறி': விரக்தியில் விவசாயிகள்

தெருநாய்கள் 'கொல வெறி': விரக்தியில் விவசாயிகள்

தெருநாய்கள் 'கொல வெறி': விரக்தியில் விவசாயிகள்


ADDED : அக் 13, 2024 05:51 AM

Google News

ADDED : அக் 13, 2024 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில், மூலனுார் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஆடுகளை கடித்தும், கன்றுக்குட்டிகளின் வாலை கடித்து துண்டித்தும், தெரு நாய்களின் அட்டகாசம் தொடர்வதால், மாற்று வழி தெரியாமல் கால்நடை வளர்ப்போர் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில், தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், வெள்ளகோவில், மூலனுார் உள்ளிட்ட இடங்களில் வளர்ப்பு ஆடு, கோழி, கன்றுக்குட்டி போன்றவற்றை தெருநாய்கள் கடித்து, தாக்குகின்றன. இதனால், ஏராளமான ஆடுகள் இறந்துள்ளன. இறந்து போன ஆடுகளுக்கு இழப்பீடு கேட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று மட்டும் மூன்று இடத்தில் தெரு நாய்களின் தாக்குதலால் கால்நடைகள் இறந்திருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தாராபுரம் வட்டம் மூலனுார் அருகில் முளையாம்பூண்டி, கருக்கம்பாளையம்புதுார் கிராமத்தில், மேய்ந்துக் கொண்டிருந்த, 8 மாத கன்றுக்குட்டியை தெரு நாய்கள் கடித்து, அதன் வாலை துண்டித்துள்ளன.காங்கயம் வட்டம் வீரணம்பாளையம், சூலக்கல்புதுாரில், சரசு என்பவரின் தோட்டத்தில், தெரு நாய் கடித்ததில் கன்றுக்குட்டி இறந்துள்ளது. வேலங்காட்டுபாளையத்தில் ஈஸ்வரன் என்பவரின் ஆடு, தெரு நாய்களால் கடிபட்டுள்ளது.இவ்வாறு, தெருநாய்களின் தாக்குதலால், கால்நடைகள் பலியாவதும், காயம்படுவதும் தொடர் கதையாகி வரும் நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் மீது விவசாயிகள் கடும் விரக்தியில் உள்ளனர்.

தெருநாய்களின் தாக்குதலால், கால்நடைகள் பலியாவதும், காயம்படுவதும் தொடர் கதையாகி வரும் நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் மீது விவசாயிகள் கடும் விரக்தியில் உள்ளனர்.

17 ஊராட்சிகளில் தீர்மானம்

தெருநாய்களால் இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, 17 ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகம் எந்தவொரு முன்னெடுப்பையும் எடுப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு முறை கால்நடைகள் இறக்கும் போதும், வி.ஏ.ஓ., மற்றும் கால்நடை மருத்துவரை தொடர்பு கொண்டு, பிரேத பரிசோதனை செய்ய வேண்டியிருக்கிறது. கடிபட்டு காயம்படும் கால்நடைகளுக்கு தினசரி மருத்துவ உதவி தேவைபடுகிறது. இதுபோன்று பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் எதிர்கொள்கின்றனர். இறந்த கால்நடைகளுக்கு இழப்பீடு கொடுக்காமல், தெரு நாய்களையும் கட்டுப்படுத்தாமல் இருந்தால், எப்படி கால்நடை வளர்ப்பை தொடர்வது என்ற குழப்பம் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு வழங்க வேண்டும்.- வேலுசாமி, தலைவர், பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் பாதுகாப்பு சங்கத் தலைவர்.








      Dinamalar
      Follow us