sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை; நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

/

மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை; நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை; நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை; நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை


ADDED : ஏப் 02, 2025 10:14 PM

Google News

ADDED : ஏப் 02, 2025 10:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை நகராட்சி பகுதிகளில், மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால், இணைப்பு துண்டிப்பு, அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி எச்சரித்துள்ளது.

உடுமலை நகராட்சி கமிஷனர் சரவணகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

உடுமலை நகராட்சிக்குட்பட்ட, ஒன்று முதல், 33 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு நகராட்சி சார்பில் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

தற்போது, பொதுமக்கள் குடிநீர் குழாய் இணைப்பில், மின் மோட்டார்கள் பொருத்தி, குடிநீர் உறிஞ்சி வருவதாக தெரிகிறது. இதனால், சீரான குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்படுகிறது.

மின் மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுவது சட்டப்படி குற்றமாகும். தற்போது கோடை காலம் என்பதாலும், வரும் ஜூன் வரை வெயிலின் தாக்கம் நீடிக்கும் என்பதாலும், இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவோர் மீது, நகராட்சி நிர்வாகம் சார்பில், குடிநீர் வினியோக உப விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மின் மோட்டார் பொருத்தி, குடிநீர் எடுப்பவர்களின் மின் மோட்டார் பறிமுதல் செய்து, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும்.

இவ்வாறு, தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us