ADDED : பிப் 26, 2026 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருமாநல்லுார்: கோவை தனியார் கல்லுாரியில் பட்ட படிப்பு படித்து வரும் பெருமாநல்லுாரை சேர்ந்த மாணவர் கார்த்திகேயன், கல்லுாரியில் சேர்ந்து கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருந்து வந்தார்.
மாணவரின் குடும்பத்தினர் திருப்பூர் காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளை சந்தித்து, கட்டணம் செலுத்த முடியாத நிலை குறித்து எடுத்து கூறினர்.
அறக்கட்டளை சார்பில், தலைவர் செல்வராஜ், செயலாளர் குமார், ஆகியோர் மாணவனுக்கு கல்வி உதவி தொகையாக 37 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.

