ADDED : அக் 28, 2024 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில், 'என் பாரத்' என்ற தன்னார்வ திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வந்து, நோயாளிகள் எந்தெந்த வார்டுகள் எங்குள்ளது என்பது குறித்து வழிகாட்டினர். அலகு - -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், செவிலிய கண்காணிப்பாளர் முருகாம்பாள் முன்னிலை வகித்தனர். மாணவ செயலர்கள் மது கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, செர்லின் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.