sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பஸ் இன்றி மாணவர் அவதி; 'லிப்ட்' கேட்கும் பரிதாபம்

/

பஸ் இன்றி மாணவர் அவதி; 'லிப்ட்' கேட்கும் பரிதாபம்

பஸ் இன்றி மாணவர் அவதி; 'லிப்ட்' கேட்கும் பரிதாபம்

பஸ் இன்றி மாணவர் அவதி; 'லிப்ட்' கேட்கும் பரிதாபம்


ADDED : ஜூலை 18, 2025 11:36 PM

Google News

ADDED : ஜூலை 18, 2025 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; அவிநாசியில் இருந்து கருவலுார் அரசுப்பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியருக்கு சரியான நேரத்தில் பஸ் வசதி இல்லாததால், சாலையில் பயணிப்போரிடம் 'லிப்ட்' கேட்டு, பள்ளி சென்று சேரும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலையின் இடைபட்ட கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஏராளமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

அவிநாசி, ஆட்டையம்பாளையம், சுண்டக்காம்பாளையம் உள்ளிட்ட வழித்தடத்தின் இடைப்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து, ஏராளமான மாணவர்கள் கருவலுார் அரசு பள்ளிக்கு செல்கின்றனர். கருவலுார் வரை இயக்கப்படும் டவுன் பஸ்களை தான் இவர்கள் சார்ந்துள்ள நிலையில், உரிய நேரத்தில் கருவலுார் பஸ் இயக்கப்படுவதில்லை என, மாணவர்கள் கூறுகின்றனர்.

பஸ் ஸ்டாப்பில் நீண்ட நேரம் காத்திருக்கும் மாணவர்கள், சாலையில் டூவீலரில் கடந்து செல்வோரிடம் லிப்ட் கேட்டு, பள்ளி சென்று சேரும் நிலை ஏற்படுகிறது எனவும், புலம்புகின்றனர்.

எனவே, சரியான நேரத்தில் மாணவர்களுக்கு பயன்தரும் வகையில் பஸ் இயக்க வேண்டும் என, மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரி யர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us