sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பஸ்கள் வருவதில்லை: மாணவர்கள் தவிப்பு

/

பஸ்கள் வருவதில்லை: மாணவர்கள் தவிப்பு

பஸ்கள் வருவதில்லை: மாணவர்கள் தவிப்பு

பஸ்கள் வருவதில்லை: மாணவர்கள் தவிப்பு


ADDED : அக் 25, 2025 01:11 AM

Google News

ADDED : அக் 25, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: அவிநாசி முதல் கூட்டப்பள்ளி வரை இயங்கி வரும் அரசு பஸ்களை முறையான நேரத்தில் இயக்கவும், கூடுதல் பஸ் வசதி கேட்டும், போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளரிடம், அவிநாசி ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் அளித்த மனு:

வடுகபாளையம், நடுவச்சேரி, புஞ்சை தாமரைக்குளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்கள், மாணவ, மாணவியர் அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் அவிநாசி, திருப்பூர் உட்பட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இதில் அவிநாசி, திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய ஊர்களுக்கு சென்று தான் படிக்க வேண்டிய சூழ்நிலையில் மாணவர்கள் உள்ளனர். ஒரு சில நாட்களில் காலை, 10:00 மணிக்கு மேல் மாலை 4:00 மணி வரை எந்த பஸ்களும் இந்த வழியில் இயக்குவதில்லை. எனவே கூடுதல் பஸ் வசதிகள் ஏற்படுத்தி மற்றும் இயங்கி வரும் பஸ்களையும் முறையாக இயக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us