sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கல்லுாரி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பாராட்டு

/

கல்லுாரி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பாராட்டு

கல்லுாரி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பாராட்டு

கல்லுாரி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : ஜூலை 15, 2025 08:23 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 08:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், ஆண்டு விளையாட்டு விழா மற்றும் கல்லுாரி விழா நடந்தது.

விளையாட்டு விழாவில், கல்லுாரி முதல்வர் மணிவண்ணன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற உடற்கல்வி துணை இயக்குனர் வெங்கடேசன், திருப்பூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் ஆகியோர், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

மாணவி நவரஞ்சனி, மாணவன் குணசேகர் சாம்பியன் பட்டம் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கல்லுாரி மற்றும் விடுதி ஆண்டு விழாவில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., பதிவாளர் நரேந்திரபாபு, கல்லுாரி ஆண்டு மலரை வெளியிட்டு பேசுகையில், ''கால்நடை மருத்துவர்களுக்கு கால்நடைகள் நலம், உற்பத்தி திறனை அதிகரித்தல், நோய் வரும் முன் காத்தல், பொது சுகாதாரம், கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், சுகாதாரமான கால்நடை சார்ந்த உணவு பொருட்களை சமூகத்துக்கு அளித்தல் என பல கடமைகள் உள்ளது. இதை உணர்ந்து, மாணவர்கள் செயலாற்ற வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us