sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்கள் போராட்டம்

/

அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்கள் போராட்டம்

அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்கள் போராட்டம்

அரசு கலைக்கல்லுாரியில் மாணவர்கள் போராட்டம்


ADDED : ஜன 29, 2025 10:52 PM

Google News

ADDED : ஜன 29, 2025 10:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், கழிப்பறை சுகாதாரமில்லாததை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், மூவாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இளநிலை மற்றும் முதுநிலைப்பிரிவில் படிக்கின்றனர். கல்லுாரியில் கழிப்பறை துாய்மையில்லாமல் இருப்பது, மைதானம் பராமரிப்பில்லாதது, சீரான குடிநீர் வினியோகம் இல்லாதது உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லுாரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு, கல்லுாரி நிர்வாகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, என, மாணவர்கள் தெரிவித்தனர். கல்லுாரி முதல்வர் பேச்சு நடத்திய பின், மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

கல்லுாரி முதல்வர் கல்யாணி கூறுகையில், 'கல்லுாரியில் கழிப்பறை துாய்மைப்படுத்துவதற்கு வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதுதான் இந்த பிரச்னைக்கு காரணம். கூடுதல் பணியாளர்கள் நியமித்து, சுகாதாரம் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது,' என்றார்.






      Dinamalar
      Follow us