sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சோளம் விதைக்கு மானியம்

/

சோளம் விதைக்கு மானியம்

சோளம் விதைக்கு மானியம்

சோளம் விதைக்கு மானியம்


ADDED : டிச 21, 2024 06:33 AM

Google News

ADDED : டிச 21, 2024 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், நெல், 10 ஆயிரம் எக்டர் பரப்பிலும், தானியங்கள், 60 ஆயிரம் எக்டர், பயறு வகைகள், 20 ஆயிரம் எக்டர், நிலக்கடலை 10 ஆயிரம் எக்டர் பரப்பில் பயிரிடப்படுகிறது.

தானியத்தில், சோளம் மட்டும், 37 ஆயிரம் எக்டர் பயிரிடப்படுகிறது. உள்ளூர் ரகங்களை பயிரிடு வதால், மகசூல் குறைந்துவிடுகிறது. மகசூல் அதிகரிக்க ஏதுவாக, 'கோ -32' ரக சோளம் அறிமுகம் செய்யப்பட்டது.

சோளம் விதைக்கு, கிலோ 30 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. விதைகள் வினியோகத்துக்கு, கிலோவுக்கு 30 ரூபாய் மானியம் உள்ளிட்ட பல்வேறு மானியங்கள் வழங்கப்படுகின்றன.

பல்லடம் தாலுகா, நாரணாபுரம் கிராமத்தில், முத்துசாமி என்பவரின் 20 ஏக்கர் தோட்டத்தில், சோளம் விதைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. விதைப்பண்ணை திடலை, திட்ட ஆலோசகர் அரசப்பன், வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) வசந்தா, வேளாண்மை அலுவலர் அஜித், உதவி விதை அலுவலர் முத்துசெல்வன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us