ஜனவரி 9ல் 6 மாவட்டம், ஜனவரி 10ல் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
ஜனவரி 9ல் 6 மாவட்டம், ஜனவரி 10ல் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
ADDED : ஜன 07, 2026 02:25 PM

சென்னை: மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஜனவரி 9ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. சென்னைக்கு 1,270 கி.மீ தெற்கு தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரம் அடையும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு திசை நோக்கி நகரக்கூடும்.
ஜனவரி 8ம் தேதி கனமழை (மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவாரூர்
* நாகை
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* ராமநாதபுரம்
ஜனவரி 9ம் தேதி கனமழை (மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* தஞ்சை
* நாகை
* புதுக்கோட்டை
* ராமநாதபுரம்
ஜனவரி 10ம் தேதி
மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் (ஆரஞ்சு அலர்ட்)
* கடலூர்
* மயிலாடுதுறை
* திருவாரூர்
* நாகை
கனமழை (மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* சென்னை
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* விழுப்புரம்
* கள்ளக்குறிச்சி
* அரியலூர்
* தஞ்சை
* புதுக்கோட்டை
ஜனவரி 11ம் தேதி
கனமழை (மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருவள்ளூர்
* சென்னை
* ராணிப்பேட்டை
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* வேலூர்
* திருவண்ணாமலை
* விழுப்புரம்
* கள்ளக்குறிச்சி
* கடலூர்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

