sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காங்கயம் ரோட்டில் உருவான திடீர் 'ஆறு' போக்குவரத்து ஸ்தம்பிப்பு

/

காங்கயம் ரோட்டில் உருவான திடீர் 'ஆறு' போக்குவரத்து ஸ்தம்பிப்பு

காங்கயம் ரோட்டில் உருவான திடீர் 'ஆறு' போக்குவரத்து ஸ்தம்பிப்பு

காங்கயம் ரோட்டில் உருவான திடீர் 'ஆறு' போக்குவரத்து ஸ்தம்பிப்பு


ADDED : ஜூன் 07, 2025 11:24 PM

Google News

ADDED : ஜூன் 07, 2025 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: குடிநீர் குழாய் உடைந்து, ஆறு போல் ரோட்டில் தண்ணீர் ஓடியதால், காங்கயம் ரோடு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூர் காங்கயம் ரோடு பகுதிகளில் உள்ள வார்டு மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக, நான்காவது குடிநீர் திட்டத்தில் பகிர்மான குழாய் பதிக்கப்பட்டது. மெயின்ரோடு வழியாக, தண்ணீர் செல்லும் மெயின் குழாயும் பதிக்கப்பட்டது.

குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், சோதனை முறையில் தண்ணீர் சப்ளை செய்யும் பணி, வார்டு வாரியாக நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, காங்கயம் ரோடு அமர்ஜோதி கார்டன், டி.எஸ்.கே., மருத்துவமனை பகுதியில், திடீரென குழாய் உடைந்து தண்ணீர் ரோட்டில் ஓடியது.

ரோடு முழுவதும் ஆறு போல் தண்ணீர் ஓடியதால், டூ வீலரில் பயணித்தவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். மூன்று மணி நேரம், காங்கயம் ரோடு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us