sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பொருள் சப்ளை குளறுபடி ; ரேஷன் கடை முற்றுகை

/

பொருள் சப்ளை குளறுபடி ; ரேஷன் கடை முற்றுகை

பொருள் சப்ளை குளறுபடி ; ரேஷன் கடை முற்றுகை

பொருள் சப்ளை குளறுபடி ; ரேஷன் கடை முற்றுகை


ADDED : ஏப் 15, 2025 11:44 PM

Google News

ADDED : ஏப் 15, 2025 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்; பொருட்கள் சரியாக வழங்காததை கண்டித்து, ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாநகராட்சி, 16வது வார்டு, பிச்சம்பாளையம், துரைசாமி புரத்தில் லில்லி மகளிர் சுய உதவி குழு ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. கடையில் சரியாக பொருட்கள் வினியோகிப்பதில்லை.

விற்பனையாளர் சரியான நேரத்திற்கு வருவதில்லை என, பொதுமக்கள் அழைக்கழிக்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில், ரேஷன் கடையில் நேற்று காலை பொதுமக்கள் போருட்கள் வாங்க சென்றபோது, 'பாயின்ட் ஆப் சேல்' கருவி பழுதாகி விட்டதால், பொருட்கள் வழங்க முடியாது என விற்பனையாளர் கூறி உள்ளார். இதனால், ஆவேசம் அடைந்த பொதுமக்கள் ரோஷன் கடையை முற்றுகையிட்டு, கோஷமிட்டனர்.

தொடர்ந்து, குடிமை பொருள் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரி வரவில்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனர். உடனே, குடிமை போருள் தாசில்தார் உமாராணி அப்பகுதிக்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அனைத்து பொருட்களும் முறையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி கூறியதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us