ADDED : அக் 29, 2024 09:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தீபாவளியை முன்னிட்டு, ஓய்வூதிய உதவித்தொகை பெறும் முதியோர் மற்றும் விதவைகளுக்கு, தமிழக ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 1,135 ரேஷன் கடைகள்உள்ளன.
மொத்தம் 45,073 பெண்கள்; 19,582 ஆண்கள் என, ஓய்வூதிய உதவி பெறும் 64,655 பேர் இலவச வேட்டி, சேலை பெறும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கான வேட்டி, சேலைகள் வந்து சேர்ந்துள்ளன.
வழங்கல் பிரிவு அதிகாரிகள், மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு வேட்டி - சேலை அனுப்பி வருகின்றனர். திருப்பூர் நகர பகுதிகளில், பெரும்பாலான ரேஷன்கடைகளில் இலவச வேட்டி, சேலை வினியோகம் துவக்கப்பட்டுள்ளது. பயனாளி கார்டுதாரர்கள், ரேஷன் கடைகளுக்கு சென்று, இலவச வேட்டி, சேலை பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -